பெரும்பான்மையை பெற்ற கட்சிகளுக்கு தேர்தல் ஆணைக்குழு வெளியிட்ட விசேட அறிவித்தல்!


உள்ளூராட்சி நிறுவனங்களில் பெரும்பான்மை வாக்குகளைப் பெற்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு தலைவர்களை நியமிப்பது தொடர்பாக அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி சபை தேர்தலில், 50 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்று உள்ளூராட்சி மன்றங்களை வென்ற கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களின் செயலாளர்களுக்கு, இது தொடர்பாக அறிவிக்கப்படும் என ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பிரதேச மட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூராட்சி உறுப்பினர்களின் பெயர்கள் அடுத்த சில நாட்களில் வர்த்தமானியில் வெளியிடப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

உள்ளூராட்சி நிறுவனங்களுக்கு நியமிக்கப்படவுள்ள பெண் பிரதிநிதிகளின் எண்ணிக்கை பற்றி, எதிர்வரும் நாட்களில் சம்பந்தப்பட்ட கட்சிகள் மற்றும் சுயேட்சைக் குழுக்களுக்கு அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.