4 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை!


மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

அதன்படி, காலி, களுத்துறை, கேகாலை மற்றும் கண்டி மாவட்டங்களில் வசிப்பவர்கள் மண்சரிவுகள் குறித்து எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மையம் அறிவுறுத்தியுள்ளது.

இதே நேரத்தில், மேற்கு, சப்ரகமுவ, மத்திய, தெற்கு, வடக்கு, வடமத்திய மற்றும் வடமேற்கு மாகாணங்கள் மற்றும் திருகோணமலை மாவட்டத்தில் அவ்வப்போது பலத்த காற்று (மணிக்கு 50-60 கிலோமீற்றர்) வீசக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

நாட்டின் பிற பகுதிகளில் அவ்வப்போது பலத்த காற்று (மணிக்கு 30-40 கிலோமீற்றர்) வீசக்கூடும் என்று திணைக்களம் மேலும் அறிவித்துள்ளது.