ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்தும் பெண்கள் - ஆய்வில் வெளியான அதிர்ச்சித் தகவல்!


தொலைபேசிகள் தற்போது வாழ்க்கையின் ஒரு பகுதியாக மாறிவிட்டது. இதனை உபயோகிப்பதால் யாருக்கு அதிக அளவில் ஆபத்து மற்றும் மன அளவில் பதற்றத்தை அனுபவிக்கும் வாய்ப்பு உள்ளது என்பது குறித்து சமீபத்தில் ஸ்பெயின் நாட்டில் ஆய்வு ஒன்று நடத்தப்பட்டது.

இந்த ஆய்வுக்கு 25 வயது உடைய 104 ஆண்கள் 293 பெண்கள் மற்றும் மூன்றாம் பாலினத்தை சேர்ந்த சிலரை எடுத்துக் கொண்டனர். அவர்கள் அனைவரும் 100 சதவீதம் தொடர்ந்து ஸ்மார்ட் தொலைபேசிகளை பயன்படுத்தி வந்தனர் .

இந்த ஆய்வின் முடிவில் ஆண், பெண் பாலினங்களுக்கு இடையே தொலைபேசி பயன்படுத்துவதால் ஏற்படும் பாதிப்பில் வேறுபாடுகள் கண்டறியப்பட்டன.

அதிக அளவில் ஸ்மார்ட் தொலைபேசிகள் பயன்படுத்தும் இளம்பெண்கள் மனம் நலம் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் என்பது தெரியவந்துள்ளது.

ஸ்மார்ட் தொலைபேசிகள் அதிக அளவில் பயன்படுத்தும் பெண்கள் அதிக துன்பங்களை எதிர்கொள்ள கூடும். ஆண்களுடன் ஒப்பிடும் போது பெண்கள் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

ஒவ்வொரு நாளும் தொலைபேசி பயன்படுத்துவதால் சமூகப் பதற்றத்தை அனுபவிக்கும் வாய்ப்புகள் அதிக அளவில் ஏற்படுவது இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மேலும் மன உளைச்சல், தீங்கு விளைவிக்கும் நடத்தை, தற்கொலை எண்ணம் அதிகரிப்பதற்கு இந்த ஸ்மார்ட் தொலைபேசியின் பயன்பாடு காரணங்களாக இருப்பதும் தெரிய வந்துள்ளது.

இளைய தலைமுறையினரிடையே ஸ்மார்ட்போன் பயன்பாடு சார்ந்த சிக்கல்களைத் தீர்ப்பதற்கும், அவற்றின் காரணங்கள் மற்றும் விளைவுகளை ஆராய்வதற்கும் தொடர்ச்சியான ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.