இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியமைக்காக கைது செய்யப்பட்ட ருஷ்தி பிணையில் விடுதலை!
இஸ்ரேலுக்கு எதிராக ஸ்டிக்கர் ஒட்டியதாக சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு மேலதிக விசாரணைகளுக்காக பயங்கரவாத தடுப்பு சட்டத்தில் தடுத்து வைக்கப்பட்ட மொஹமட் ருஷ்தி பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பில் கடந்த 22 ஆம் திகதி வணிக வளாகத்தில் கைது செய்யப்பட ருஷ்தியை பயங்கரவாத தடுப்பு பிரிவினர் அத்தனகல்ல நீதிமன்றில் இன்று திங்கட்கிழமை (07) ஆஜர்படுத்திய நிலையில், அவரை நீதிமன்றம் பிணையில் விடுதலை செய்ய உத்தரவிட்டுள்ளது.