நாட்டின் பல பகுதிகளில் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்!


நாட்டின் பல பகுதிகளில் பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

மேற்கு, வடமேற்கு மாகாணங்கள் மற்றும் காலி, மாத்தறை மாவட்டங்களில் காலை நேரத்திலும் மழை ஆரம்பிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா, கிழக்கு மற்றும் தெற்கு மாகாணங்களின் சில பகுதிகளில் 75 மி.மீ வரை கனமழை பதிவாகும் வாய்ப்புள்ளது.

சப்ரகமுவ, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளில் காலை நேரங்களில் மூடுபனி காணப்படும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைக் குறைக்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.