இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் கடும் வெப்பம்..!


இன்றைய தினம் நாடளாவிய ரீதியில் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் கடும் வெப்பமான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, வடக்கு, வடமத்திய, வடமேற்கு, மேற்கு, தெற்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் சில பகுதிகளிலும், இரத்தினபுரி மற்றும் மொனராகலை மாவட்டங்களிலும் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை ‘எச்சரிக்கை நிலை’ வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வெப்பத்தால் ஏற்படும் நோய்நிலமைகளை தவிர்க்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை கேட்டுக்கொண்டுள்ளது.

"அதிக வெப்பத்தால் ஏற்படும் பாதிப்புகளை தவிர்க்க, நிழலான இடங்களில் அடிக்கடி ஓய்வு எடுக்கவும் மற்றும் தேவையான அளவு தண்ணீர் பருகவும். வயதானவர்கள் மற்றும் உடல் நலக்குறைவுடையவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

வெளியிடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களில் குழந்தைகள் மற்றும் சிறுவர்களை நீண்ட நேரம் தனியாக விடக்கூடாது. அதிக வெப்பம் இருக்கும் நேரங்களில் வெளிப்புறச் செயற்பாடுகளை முடிந்தவரை தவிர்க்கவும். வெளியில் செல்லும் போது வெள்ளை அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிந்து, உடலை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளவும்."