புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அனுர இரங்கல்


புனித பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் மறைவுக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தனது இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது அதிகாரப்பூர்வ X கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.

“புனித பாப்பரசர் பிரான்சிஸ் மறைவுக்கு இலங்கை மக்கள் சார்பாக தனது  இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அமைதி, இரக்கம் மற்றும் மனிதநேயம் மீதான அவரது அசைக்க முடியாத அர்ப்பணிப்பு உலகில் ஒரு அழியாத அடையாளத்தை ஏற்படுத்தியுள்ளது என்று ஜனாதிபதி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

அவரது கருணை, நீதி மற்றும் மதங்களுக்கு இடையேயான நல்லிணக்கம் ஆகியவற்றின் மரபு எதிர்கால சந்ததியினருக்கு ஒரு முன்மாதிரியாக அமையும் என்று ஜனாதிபதி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது 88 ஆவது வயதில் உயிரிழந்த பாப்பரசர் பிரான்சிஸ், பரிசுத்த பாப்பரசராக 12 வருடங்கள் சேவையாற்றிய நிலையில் நிமோனியா தொற்று காரணமாக கடந்த பெப்ரவரி மாதம் ரோமிலுள்ள வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் இவர் உயிரிழந்துள்ளதாக வத்திக்கான் அறிவித்துள்ளது.