பெரும்பாலான பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!


நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. குறிப்பாக மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள், ஹம்பாந்தோட்டை, அம்பாறை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களில் சில இடங்களில் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் மேற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள், காலி, மாத்தறை மற்றும் புத்தளம் மாவட்டங்களில் காலை வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் சாத்தியம் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இடியுடன் கூடிய மழை பெய்யும் நேரங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் மின்னல் தாக்கமும் ஏற்படும் வாய்ப்பு உள்ளதால், பொதுமக்கள் பாதுகாப்பு நடவடிக்கைகளை முன்கூட்டியே எடுத்து அவதானமாக இருக்குமாறு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

அதே நேரம் மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்கள் மற்றும் அம்பாறை மாவட்டத்தில் காலை வேளையில் சில இடங்களில் மூடுபனியுடன் கூடிய வானிலை காணப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

நாட்டின் தென்மேற்கு பகுதியில் இருந்து வீசும் காற்றின் வேகம் மணிக்கு 25 முதல் 35 கிலோமீட்டர் வரை இருக்கும் எனவும், புத்தளம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலான கடற்கரையோரக் கடல் பகுதிகளில் காற்றின் வேகம் சில நேரங்களில் மணிக்கு 45 கிலோமீட்டர் வரை அதிகரிக்கக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.