பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை!
தென் மாகாணத்தில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்பார்ப்பை தெரிவித்துள்ளது. பிற்பகல் அல்லது இரவு நேரங்களில் நாட்டின் பிற பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். மேற்கு மாகாணம் மற்றும் புத்தளம் மாவட்டத்தின் கடலோரப் பகுதிகளில் காலை வேளையிலும் மழை பெய்யக்கூடும்.
சப்ரகமுவ, தெற்கு, மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில் சில இடங்களில் சுமார் 75 மி.மீ. வரையிலான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். இந்த மாகாணங்களின் சில பகுதிகளில் காலை வேளைகளில் மூடுபனியுடன் கூடிய வானிலை எதிர்பார்க்கப்படுகிறது. இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக உள்ளூர்மயமாக்கப்பட்ட பலத்த காற்று மற்றும் மின்னலால் ஏற்படும் சேதங்களைத் தவிர்க்க போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்படுகிறது.
இவ்வருடம் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதியிலிருந்து 14ஆம் திகதி வரை சூரியனின் வடதிசை நோக்கிய இயக்கத்தின் காரணமாக இலங்கையின் அகலாங்குகளுக்கு நேராக உச்சம் கொடுக்கவுள்ளது. இதனைத் தொடர்ந்து, இன்று நண்பகல் 12:12 மணியளவில் உயங்கல்ல, அரங்கல, கொங்கஹவெல, மொரகஹகந்த மற்றும் மட்டக்களப்பு ஆகிய பகுதிகளுக்கு மேல் சூரியன் உச்சம் தரும் இலங்கைக்கு மிக அருகில் உள்ள பகுதிகள் ஆகும்.