தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியம்
தென்னந்தோப்பு உரிமையாளர்களுக்கு உர மானியங்களை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதாக பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் சமந்த வித்யாரத்ன தெரிவித்துள்ளார்.
இதற்காக 5,600 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஐந்து ஏக்கருக்கும் குறைவான தென்னை விவசாயிகளுக்கு இந்த மாத இறுதிக்குள் உர மானியங்களை வழங்கும் திட்டங்கள் தயாரிக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார்.
மேலும், உர மானியங்களை வழங்குவதற்காக அரசாங்கத்திடம் 56,700 மெற்றிக் தொன் உரம் இருப்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
Tags:
இலங்கை செய்தி