ஊழியர் சேமலாப நிதி தொடர்பான அரசாங்கத்தின் புதிய அறிவிப்பு


கடந்த காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வினைத்திறனற்ற முதலீடுகளுக்குப் பதிலாக, தொழிலாளர்களுக்கு அதிக நன்மைகளை கொண்டு வர EPF என்ற ஊழியர் சேமலாப நிதி மற்றும் ETF என்ற ஊழியர் நம்பிக்கை நிதிகளைப் பயன்படுத்தப் போவதாக தொழில் அமைச்சர் அனில் ஜெயந்த நாடாளுமன்றில் உறுதியளித்துள்ளார்.

கடந்த காலங்களில் EPF மற்றும் ETF எவ்வாறு உற்பத்தியற்ற முறையில் முதலீடு செய்யப்பட்டன என்பதை நாடு கண்டுள்ளது.

ஆகவே, இந்த நிதிகளை அதிக உற்பத்தி பயன்பாட்டிற்கு பயன்படுத்துவதன் மூலம் உழைக்கும் மக்கள் அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதை உறுதிசெய்ய புதிய சட்டங்கள் கொண்டு வரப்படும் என கூறிய அமைச்சர், டிஜிட்டல் தொழில்நுட்ப மேம்பாட்டு அமைச்சகத்துடன் EPF மற்றும் ETF ஆகியவற்றை டிஜிட்டல் மயமாக்கவுள்ளதாகவும் உறுதியளித்துள்ளார்.

எதிர்காலத்தில் EPF மற்றும் ETF ஆகியவை இணையத்தின் ஊடாக இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.