மலேசியாவிற்கு குறைந்த கட்டணத்தில் நேரடி விமான சேவை; வெளியான மகிழ்ச்சி செய்தி

 

இலங்கையின் முதல் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான சர்வதேச விமான நிறுவனம் ஃபிட்ஸ்எயார், மலேசியாவின் கோலாலம்பூருக்கான நேரடி விமான சேவைகளை அறிமுகப்படுத்தவுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த முடிவு, நிறுவனத்தின் முன்னணி குறைந்த கட்டண விமான சேவையாக நிலையை மேலும் வலுப்படுத்துவதற்கான நோக்கத்தில் எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏப்ரல் 4, 2025 அன்று கோலாலம்பூர் விமான சேவைகள் நான்கு வாராந்திர சேவைகளுடன் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சேவையின் அறிமுகத்தை முன்னிட்டு, கோலாலம்பூருக்கான பற்றுச்சீட்டுக்கு ரூ. 65,300 என்ற சிறப்பு அறிமுக கட்டணம் வழங்கப்படுகிறது. இத்துடன், 20 கிலோகிராம் நிறையுடைய பொருட்கள் மற்றும் 7 கிலோகிராம் நிறையுடைய கை பொருட்கள் உடன் இந்த விலை வழங்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய சேவையின் மூலம், ஃபிட்ஸ்எயார் தனது வலையமைப்பை மேலும் விரிவுபடுத்தி, பயணிகளுக்கு மிகவும் மலிவு விலையில் தொந்தரவு இல்லாத பயண விருப்பங்களை வழங்குகின்றது. மேலும், இந்த புதிய பாதை, வர்த்தகம், சுற்றுலா மற்றும் பயணத்திற்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தற்போதுள்ள விமான நிறுவனத்தின் வலையமைப்பில் மாலே, துபாய், டாக்கா மற்றும் சென்னை போன்ற இடங்கள் அடங்கியுள்ளன. இவை அனைத்திற்கும் கொழும்பில் உள்ள அதன் முக்கிய மையம் மூலம் தடையற்ற இணைப்புகளை வழங்கப்படுகிறது.

இந்த விமான சேவைகள் மற்றும் முன்பதிவுகளுக்கான மேலதிக தகவலுக்கு, www.fitsair.com என்ற இணையதளத்தை அணுகலாம்.