இன்று உலக காசநோய் தினம் : நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 காசநோய் நோயாளிகள் அடையாளம்!
2024 ஆம் ஆண்டில் பதிவான மொத்த 9,180 காசநோயாளிகளில் 5,219 பேர் ஆண்கள் மற்றும் 3,259 பேர் பெண்கள் என்றும், 228 பேர் 14 வயதுக்குட்பட்ட குழந்தைகள் என்றும் சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
உலக சுகாதார அமைப்பின் மதிப்பீடுகளின்படி, இலங்கையில் ஒவ்வொரு ஆண்டும் சுமார் 14,000 காசநோய் நோயாளிகள் அடையாளம் காணப்படுகின்றனர். இருப்பினும், சமூகத்தில் சுமார் 4,000 முதல் 5,000 வரை கண்டறியப்படாத நோயாளிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. மேலும், ஒரு காசநோய் நோயாளி 15 ஆரோக்கியமான நபர்களுக்கு தொற்று ஏற்படுத்தக்கூடும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
உலகளவில், உலக மக்கள் தொகையில் கால் பகுதியினர் ஆண்டுதோறும் காசநோயால் பாதிக்கப்படுகின்றனர். அவர்களில் சுமார் 10 மில்லியன் பேர் காசநோயை உருவாக்குகிறார்கள். காசநோய் இன்னும் உலகின் மிகக் கொடிய நோயாகத் தொடர்கிறது, மேலும் இது பாக்டீரியாவால் பரவுகிறது.
2025 ஆம் ஆண்டு உலக காசநோய் தினத்தின் கருப்பொருள் “Yes! We Can End TB: Commit, Invest, Deliver” (ஆம்! நாம் காசநோயை முடிவுக்குக் கொண்டுவரலாம்: உறுதிமொழி, முதலீடு, வழங்குதல்) என்பதாகும். இந்தக் கருப்பொருள் காசநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான உறுதிப்பாடு, முதலீடு மற்றும் அதைச் செயல்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டுள்ளது.
இதன்படி, இன்று (மார்ச் 24) காலை 08.30 மணிக்கு சுகாதாரப் பிரிவால் காசநோய் தடுப்பு மற்றும் விழிப்புணர்வு நடைப்பயணம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.