ஆட்பதிவுத் திணைக்களத்தின் சேவைகள் இன்று தற்காலிக இடைநிறுத்தம்!


ஆட்பதிவுத் திணைக்களத்தின் (DRP) கணினி அமைப்பில் ஏற்பட்ட திடீர் கோளாறு காரணமாக, இன்று (மார்ச் 24) அதன் தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து மாகாண அலுவலகங்களினதும் ஒருநாள் சேவை உள்ளிட்ட அனைத்து பொதுச் சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

கணினி கட்டமைப்பு சீரமைக்கப்படும் வரை சேவைகள் இடம்பெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.