35000 மெட்ரிக் தொன் எரிபொருள் கப்பல் நாட்டிற்கு..!


35000 மெட்ரிக் தொன் டீசல் மற்றும் பெட்ரோல் அடங்கிய கப்பலொன்று இன்று நாட்டிற்கு வருகை தரவுள்ளதாக கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் யுத்தம் நிலவும் சூழலில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த கப்பலின் வருகை முக்கியமானது.

இந்த கப்பலுக்கு மேலதிகமாக இந்த மாதத்தில் சிங்கப்பூர் மற்றும் இந்தியாவிலிருந்து எரிபொருள் தொகையைக் கொண்ட 3 கப்பல்கள் நாட்டை வந்தடையவுள்ளன.

இதற்கமைய ஏப்ரல் மாத நடுப்பகுதி வரை தேவையான எரிபொருள் தொகைக்கு முன்கூட்டியே கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த எரிபொருள் நாட்டிற்குள் தரையிறக்கப்படும் சந்தர்ப்பத்தில் காணப்படும் விலைக்கமைய அவற்றை பெறவுள்ளதாகவும் கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டீ.ஏ.ராஜகருணா தெரிவித்துள்ளார்.