சட்டவிரோத அந்தூரியம் செடிகளுடன் இரண்டு பெண்கள் கைது!


கட்டுநாயக்க விமான நிலையத்தில், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட 436 அந்தூரியம் செடிகள் கண்டுபிடிக்கப்பட்டு, இரண்டு இலங்கை பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாய்லாந்தின் பெங்கொக்கிலிருந்து வந்த அந்தவர்கள், விவசாயத் திணைக்களத்தின் இறக்குமதி அனுமதி இல்லாமல் செடிகளை நாட்டில் கொண்டுவர முயன்றதாக தெரிவிக்கப்படுகிறது. 

சுங்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து குறித்த பெண்களை கைது செய்தனர். 

இரண்டு பெண்களும் முறையே 40 மற்றும் 45 வயதுடையவர்கள் எனவும் கொழும்பு மற்றும் அவிசாவளைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்படுகிறது.