‘டிட்வா’ சூறாவளியால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு நிவாரணம்!


கடந்த ஆண்டின் இறுதியில் நாட்டைத் தாக்கிய ‘திட்வா’ (Ditwa) சூறாவளியினால் பாதிக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களுக்கு பொருளாதார நிவாரணம் வழங்குவதற்காக, லலித் அத்துலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் அறக்கட்டளை நிதியத்தின் (MTF) அறங்காவலர் சபை ஒருமுறை மாத்திரம் வழங்கப்படும் விசேட புலமைப்பரிசில் திட்டமொன்றை நடைமுறைப்படுத்த தீர்மானித்துள்ளது.

இந்த விசேட புலமைப்பரிசில் திட்டத்திற்கான விண்ணப்பங்கள் கோரப்படும் பணிகள் தற்போது ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

குறித்த விண்ணப்பங்களை www.mahapola.lk என்ற மஹாபொல உத்தியோகபூர்வ இணையதளத்தின் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.