அஸ்வெசும பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்!

அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் முதலாம் மற்றும் இரண்டாம் கட்டங்களின் கீழ் தகுதி பெற்றுள்ள பயனாளிகளுக்கான ஜனவரி மாதக் கொடுப்பனவுகள் மற்றும் முதியோர் கொடுப்பனவுகள் நாளை (28) அவர்களது வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படும் என நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சு அறிவித்துள்ளது.

அதன்படி, அஸ்வெசும முதலாம் கட்டத்தின் கீழ், 1,415,584 பயனாளி குடும்பங்களுக்கு மொத்தமாக 11,234,713,750 ரூபா அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

மேலும், அஸ்வெசும முதலாம் கட்டத்தின் ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக, 618,440 பயனாளிகளுக்கு 3,092,200,000 ரூபா வழங்கப்படவுள்ளது.

அதேபோல், அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் ஜனவரி மாதக் கொடுப்பனவாக, 248,454 பயனாளி குடும்பங்களுக்கு 2,235,137,500 ரூபா அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்படவுள்ளது.

இதற்கு மேலாக, அஸ்வெசும இரண்டாம் கட்டத்தின் கீழான ஜனவரி மாத முதியோர் கொடுப்பனவாக, 68,183 பயனாளிகளுக்கு 340,915,000 ரூபா அவர்களின் அஸ்வெசும கணக்குகளில் வரவு வைக்கப்படும் என அந்த அமைச்சு தெரிவித்துள்ளது.