யாழ் நோக்கி பயணித்த கார் விபத்து! ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயம்
யாழ்ப்பாணத்திலிருந்து மந்திகை நோக்கி பயணித்துக் கொண்டிருந்த கார் ஒன்று தடம்புரண்டதில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் பலத்த காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அச்சுவேலி – வல்லைப் பகுதியில் வேகக் கட்டுப்பாட்டை இழந்த கார், அருகில் இருந்த பாலத்தின் உள்பகுதிக்குள் தடம்புரண்டதாக கூறப்படுகிறது. இதன் போது, கார் சேற்றில் புதைந்த நிலையில் காணப்பட்டதாகவும், அதில் பயணம் செய்த மூவரும் கடுமையான காயங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி ஆடியபாதம் வீதியைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகள் ஆகியோர் இந்த விபத்தில் சிக்கியுள்ளனர். இதில் மகளின் இரு கால்களும் முறிவடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
காயமடைந்த மூவரும் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை அச்சுவேலி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
.jpeg)