தங்க விலையில் இன்று ஏற்பட்ட மாற்றம்
இலங்கையில் கடந்த சில மாதங்களாக தங்கத்தின் விலை ஏற்ற இறக்கங்களுடன் காணப்பட்டு வருகின்றது. உலக சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவதன் காரணமாக, இன்று (19.01.2025) இலங்கையிலும் தங்க விலையில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு பதிவாகியுள்ளது.
உலக சந்தையில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 4,660 அமெரிக்க டொலராக உயர்ந்துள்ள நிலையில், அதனுடைய தாக்கமாக இலங்கையில் ஒரு பவுண் தங்கத்தின் விலை ரூ. 3,000 அளவில் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு செட்டியார் தெருவில் இன்று நிலவிய தங்க விற்பனை விலைகளின் படி, 24 கரட் பவுண் தங்கத்தின் விலை ரூ. 368,000 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல், 22 கரட் பவுண் தங்கத்தின் விலை ரூ. 340,400 ஆக பதிவாகியுள்ளது.
மேலும், 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ. 46,000 ஆகவும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை ரூ. 42,550 ஆகவும் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
.jpeg)