நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில் புதிய சட்டமூலம்!


நுண்கடன் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் நோக்கில், புதிய சட்டமூலம் ஒன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணாரச்சி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு உரையாற்றிய அவர், நுண்கடன் பெற்ற சுமார் 200 பெண்கள் இதுவரை தற்கொலை செய்துகொண்டுள்ளதாக சுட்டிக்காட்டினார். இவ்வாறான துயரமான சம்பவங்களைத் தடுக்கும் வகையில் இந்த சட்டமூலம் முன்வைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயரும் சின்னமும் தவறாகப் பயன்படுத்தப்பட்டு, வைப்பாளர்களிடமிருந்து பல மில்லியன் ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

போலியான கையடக்கத் தொலைபேசி செயலி ஒன்றின் ஊடாக இந்த மோசடி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட உப தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன், கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் இந்த மோசடி இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது, இவ்வகை மோசடிகள் குறித்து அதிக விழிப்புடன் செயல்படுமாறு வைப்பாளர்களிடம் நிரோஷன் விஜேசுந்தர மேலும் கோரிக்கை விடுத்துள்ளார்.