உலக சந்தையில் பதற்றத்தை ஏற்படுத்திய தங்கத்தின் திடீர் சரிவு – இலங்கையில் விலையில் மாற்றம்
சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்டியுள்ள நிலையில், நேற்றைய தினம் ஏற்பட்ட கடும் சரிவு உலக பங்குச் சந்தைகளில் பெரும் பதற்றத்தை உருவாக்கியது. ஒரே நாளில் தங்கத்தின் விலை ஒரு அவுன்ஸுக்கு கிட்டத்தட்ட 500 அமெரிக்க டொலர் வரை வீழ்ச்சியடைந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அந்த சரிவுக்கு பின்னர் இன்று (ஜனவரி 30, 2026) ஆசிய மற்றும் ஐரோப்பிய சந்தைகளில் தங்கம் மற்றும் வெள்ளி விலையில் சிறிய மீட்பு காணப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், சர்வதேச சந்தையில் தங்கம் ஒரு அவுன்ஸ் 5,447 அமெரிக்க டொலர் என்ற அளவில் வர்த்தகமாகியுள்ளது.
உலக சந்தையில் தங்க விலையில் ஏற்பட்ட மாற்றத்தின் எதிரொலியாக, இலங்கையின் உள்நாட்டு சந்தையிலும் தங்க விலையில் மாற்றம் பதிவாகியுள்ளது.
அகில இலங்கை நகையக வியாபாரிகள் சங்கம் வெளியிட்டுள்ள புதிய விலைப்பட்டியலின்படி, 24 கரட் தங்கத்தின் விலை ஒரு பவுனுக்கு 20,000 ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.
அதன்படி,
24 கரட் தங்கம் – ஒரு பவுன்: 400,000 ரூபாய்
22 கரட் தங்கம் – ஒரு பவுன்: 368,000 ரூபாய்
மேலும்,
24 கரட் தங்கம் – ஒரு கிராம்: 50,000 ரூபாய்
22 கரட் தங்கம் – ஒரு கிராம்: 46,000 ரூபாய்
என, தற்போதைய நிலவரப்படி தங்கம் விற்பனை செய்யப்படுகிறது.
