கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு அபாய எச்சரிக்கை!


கண்டி மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவுக்கான சிவப்பு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது. 

இதன்படி, கண்டி மாவட்டத்தின் உடுதும்பர பிரதேச செயலக பிரிவுக்கும், நுவரெலியா மாவட்டத்தின் நில்தண்டாஹின்ன மற்றும் வலப்பன பிரதேச செயலக பிரிவுகளுக்கும் மண்சரிவுக்கான சிவப்பு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், பதுளை மாவட்டத்தின் கந்தகெட்டிய பிரதேச செயலக பிரிவுக்கும், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலக பிரிவுக்கும், இரண்டாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

மொனராகலை மாவட்டத்தின் பிபில பிரதேச செயலக பிரிவுக்கு விடுக்கப்பட்ட முதலாம் நிலை மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.