தரம் 6 ஆங்கிலப் பாடப் புத்தக விவகாரம் - பிரதமருக்கு நாமல் கூறிய விடயம்!


தரம் 6 மாணவர்களுக்கான ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் காணப்பட்ட தவறுகள் தொடர்பில், அமைச்சு அதிகாரி ஒருவர் பதவி விலகுவதைக் காட்டிலும், பிரதமர் ஹரிணி அமரசூரியவே அரசியல் பொறுப்பை ஏற்று பதவி விலக வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

பாடப்புத்தக விவகாரம் தொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்துள்ளமை குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

அமைச்சிற்கு வெளியே உள்ள ஒருவரால் பாடப்புத்தகத்தை அச்சிட முடியாது என்றும், அமைச்சிற்குள்ளேயே தான் அது அச்சிடப்பட்டிருக்க வேண்டும் என்றும் கூறி முறைப்பாடு செய்வது வேடிக்கையானது என நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டினார்.

மேலும், அமைச்சின் செயலாளரை யாரும் ஏமாற்ற முடியாது என்றும், ஒரு தனிநபர் மட்டும் ஒரு பாடப்பரப்பு தொடர்பாக தன்னிச்சையான முடிவுகளை எடுக்க முடியாது என்றும் அவர் கூறினார்.