அரச ஊழியர்களின் அடிப்படைச் சம்பள உயர்வு: 2026 இல் 220 பில்லியன் ரூபா மேலதிக செலவு
வைத்தியர்கள் உட்பட நாட்டின் ஒட்டுமொத்த அரச ஊழியர்களுக்காக 2026 ஆம் ஆண்டில் வழங்கப்பட்ட அடிப்படைச் சம்பள உயர்வினால், அரசாங்கத்திற்கு 220 பில்லியன் ரூபா மேலதிக நிதிச் செலவு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சரும் அமைச்சரவைப் பேச்சாளருமான நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
இன்று (27) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில்,
“இந்த மாதத்திலிருந்து வைத்தியர்கள் உட்பட அனைத்து அரச ஊழியர்களுக்கும் அடிப்படைச் சம்பள உயர்வு வழங்கப்பட்டுள்ளது.
இந்த அடிப்படைச் சம்பள உயர்விற்காக:
2025 ஆம் ஆண்டில் 110 பில்லியன் ரூபா
2026 ஆம் ஆண்டில் 220 பில்லியன் ரூபா
2027 ஆம் ஆண்டில் 330 பில்லியன் ரூபா
செலவாகும்,” எனத் தெரிவித்தார்.
அதேபோல், அடிப்படைச் சம்பளம் உயர்வடைந்ததன் காரணமாக மேலதிக நேரக் கொடுப்பனவுகள் (OT), விடுமுறை தினக் கொடுப்பனவுகள் உள்ளிட்ட பிற சலுகைகளும் அதிகரிக்கும் என்றும், இத்தகைய தீர்மானங்கள் நாட்டின் பொருளாதார நிலைமையை அடிப்படையாகக் கொண்டு மேற்கொள்ளப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
.jpg)