தொடரும் பலத்த மழை; இன்றும் நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறப்பு!


நாட்டில் தொடரும் பலத்த மழையின் காரணமாக தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள வான் கதவுகள் இன்றும் (23) திறக்கப்பட்டுள்ளன.

அதன்படி, தெதுரு ஓயா நீர்த்தேக்கத்தின் 2 வான் கதவுகள் 6 அடி உயரத்திலும், 4 வான் கதவுகள் 4 அடி உயரத்திலும் திறக்கப்பட்டு, வினாடிக்கு 19,400 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

தப்போவ நீர்த்தேக்கத்தில் 4 வான் கதவுகள் 3 அங்குல அளவிலும், 4 வான் கதவுகள் 2 அங்குல அளவிலும் திறக்கப்பட்டுள்ளன. 

இதிலிருந்து வினாடிக்கு 3,720 கன அடி நீர் ஓயாவிற்கு விடுவிக்கப்படுகிறது.