1818 அவசர தொலைபேசி இலக்கத்துக்கு போதைப்பொருள் தொடர்பான 800 முறைப்பாடுகள் பதிவு!


போதைப்பொருள் தொடர்பான தகவல் வழங்குவதற்கு அறிமுகப்படுத்தப்பட்ட 1818 எனும் தொலைபேசி இலக்கத்துக்கு கடந்த 4 நாட்களுக்குள் 800 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

நேற்று (09) நடைபெற்ற விஷப் போதைப்பொருள் ஒழிப்புக்கான முழு நாடுமே ஒன்றாக தேசிய நிகழ்ச்சித் திட்டத்தின் கொழும்பு மாவட்டச் செயற்பாட்டுத் திட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

“1818 எனும் அவசர அழைப்பு இலக்கத்துக்கு கடந்த 4 நாட்களில் 800 தொலைபேசி அழைப்புகள் கிடைத்துள்ளன. அதில் பாடசாலை தொடர்பான தகவல்களும் கிடைத்துள்ளன. குறிப்பாக கொழும்பு மாவட்டத்தில் அதிகளவான முறைப்பாடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குறித்த முறைப்பாடுகள் பொலிஸ் மா அதிபரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அதேபோல் கடந்த நான்கு நாட்களில் 5300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதன்படி, கொழும்பு மாவட்டத்தில் போதைப்பொருள் பரவல் அதிகமாக உள்ளதைக் காண முடிந்தது” எனக் கூறியுள்ளார்.