ஐ.நா. சபை அமர்வில் இன்று ஜனாதிபதியின் உரை!


ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் இன்று ஜனாதிபதி உரையாற்றுகிறார்.

இன்று (24) அந்த நாட்டு நேரப்படி பிற்பகல் 3.15 மணிக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுக்குழுவில் ஜனாதிபதி உரையாற்ற உள்ளார்.

இந்த விஜயத்தின் போது, ​​ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் மற்றும் பல உலகத் தலைவர்களுடன் இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட உள்ளார். மேலும் அமெரிக்காவில் வசிக்கும் இலங்கையர்களுடனான சந்திப்பிலும் கலந்து கொள்ள திட்டமிட்டுள்ளார்.

வெளியுறவு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத்தும் , குறித்த பயணத்தில் இணைந்துள்ளார்.