ரயில்களில் வர்த்தகத்தில் ஈடுபடுபவர்களின் மீது கடுமையாகும் சட்டம்!


ரயில்களில் வர்த்தகங்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்த ரயில் பாதுகாப்பு அத்தியட்சகர் நடவடிக்கை எடுத்துள்ளார். 

ரயில் பயணிகளிடம் இருந்து வரும் முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதையடுத்து, இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

இந்த நடவடிக்கை வர்த்தகர்களின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் என்று இலங்கை நடமாடும் ரயில் வர்த்தகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. 

வர்த்தகம் என்ற பெயரில் திருட்டுகள் இடம்பெறுவதாக பயணிகளிடமிருந்து முறைப்பாடுகள் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.