பாடசாலைகளுக்கான இரண்டாம் தவணை விடுமுறை தொடர்பில் வெளியான தகவல்!
இந்த வருடத்திற்கான பாடசாலை இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் இன்றுடன் நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
அதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் முதல் கட்டம் இம்மாதம் 18 ஆம் திகதி திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளதாகக் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகளின் இரண்டாம் கட்டம் நவம்பர் 17 ஆம் திகதி ஆரம்பமாகி டிசம்பர் 19 ஆம் திகதி வரை நடைபெறும் எனவும் கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி