அண்ணளவாக 40000 பட்டதாரிகள் பயிற்சிகளுக்காக உள்ளீர்ப்பு!


பட்டப்படிப்புகள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கை என்ன? மாணவர்களின் உரிமைகளை மீறும் வகையில் செயற்பட்ட உத்தியோகத்தர்களின் விசாரணைகள் காலதாமதமடைவது ஏன்? என்று நாடாளுமன்றில் அர்ச்சுனா எம்.பி கேள்வியெழுப்பியுள்ளார். 

நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற கேள்வி மீதான விவாதத்தின் போதே பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் கேள்வியெழுப்பினார். 

இதற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய பதிலளிக்கையில்,  

2018 இல் 40000 க்கும் அண்ணளவாக பட்டதாரி பயிலுநர்களும்,  2019 ஆம் ஆண்டில் நடைமுறைக்கு வரும் வகையில் 7500 பேரும் 2021 இல் 803 பேரும் 2023  இலும் பயிற்சிக்காக ஒருங்கிணைக்கபட்டுள்ளார்கள்.  

அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் சேவைப் பிரமாணங்களின் அடிப்படையில் பொதுச் சேவைகள் ஆணைக்குழுவினால் உரிய  அனுமதிக்கப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களின் சகல தகைமைகளும் நிறைவு செய்யப்பட்டுள்ளன என்றார்.