உர விலை அதிகரிப்பு - வெளியான அறிவிப்பு!


உலக சந்தையில் உர விலைகள் அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டில் உர விலைகளும் அதிகரித்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் உள்ள மாவட்ட விவசாய அமைப்புகளின் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போது விவசாய அமைச்சர் கே.டி. லால்காந்த் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

பொதுவான பிரச்சினையைத் தாண்டி, சலுகை விலையில் உரங்களை வழங்குவது அரசாங்கத்தின் பொறுப்பு எனவும் அவர் கூறியுள்ளார்.