வெளிநாடுகளில் உள்ள பெற்றோரின் பிள்ளைகளுக்கு உதவித்தொகைக்கான விண்ணப்பங்கள்!
வெளிநாடுகளில் பணிபுரியும் இலங்கைத் தொழிலாளர்களின் பாடசாலைக்கு செல்லும் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பங்களை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் கோரியுள்ளது.
இந்த உதவித் தொகை, 2019.01.01 முதல் 2024 வரையிலான காலப்பகுதியில் வெளிநாடுகளில் பணிபுரிந்த பணியகத்தில் பதிவு செய்யப்பட்ட பெற்றோரின் பிள்ளைகளுக்காகும்.
அந்த வகையில் இதற்கு 2024ஆம் ஆண்டில் கீழ்க்கண்ட தேர்வுகளில் தேர்ச்சி பெற்று, அரச அல்லது தனியார் பல்கலைக்கழகம், தொழில்நுட்பக் கல்லூரி அல்லது பிற அரசு கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.
தரம் 5 புலமைப்பரிசில்
க.பொ.த. சாதாரண தர (2023/2024)
க.பொ.த. உயர்தர (2023/2024)
இதற்கு வழங்கப்படும் உதவித்தொகை;
தரம் 5 புலமைப்பரிசில் – ரூ. 25,000
சாதாரண தரம் (O/L) – ரூ. 30,000
உயர் தரம் (A/L) – ரூ. 40,000
விண்ணப்பங்கள் முழுமையாக இணையவழியில் மட்டுமே ஏற்கப்படும்.
www.slbfe.lk ஐப் பார்வையிடுவதன் மூலம் பெற்றுக்கொள்ளலாம்.
2024 ஆம் ஆண்டில், 2,688 மாணவர்களுக்கு மொத்தம் ரூ. 81.12 மில்லியன் கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டதாக பணியகம் தெரிவித்துள்ளது.
இந்த திட்டம், வெளிநாட்டில் கடினமாக உழைக்கும் பெற்றோர்களின் பிள்ளைகள் கல்வியில் தொடர்ந்து முன்னேற உதவுவதற்கான ஒரு முக்கிய முயற்சியாக பார்க்கப்படுகிறது.