பொலிஸ் சேவையில் புதிய 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு!


பொலிஸ் சேவையில் 1,000 பெண் அதிகாரிகளை நியமிக்க முடிவு செய்துள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு அடுத்த வாரம் வெளியிடப்படும் என்று அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

மேலும் 5,000 பொலிஸ் அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வதற்கான நேர்காணல்கள் ஏற்கனவே தொடங்கிவிட்டதாக அமைச்சர் தெரிவித்தார்.

பொலிஸ் சேவையில்  நிலவும் வெற்றிடங்களை நிரப்பும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது செயற்படுத்தப்படுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.