ஒமிக்ரோன் வைரஸ் பரவல்: துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களில் PCR பரிசோதனைகளை முன்னெடுக்க வலியுறுத்தல்


இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து சுகாதார அதிகாரிகள் கண்காணிப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.

இலங்கையில் கொவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு எதுவும் இல்லை என்ற போதிலும், அரசாங்கம் கண்காணிப்பு நடவடிக்கைகளை அதிகரிக்கின்றது. விமானநிலையங்கள் மற்றும் துறைமுகங்களை கண்காணிக்கும் நடவடிக்கைகளை ஆரம்பித்துள்ளது.

இலங்கையில் புதிதாக ஒமிக்ரோன் துணை வகைகள் இரண்டு கண்டுபிடிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்தே இந்த நடவடிக்கைகளை அரசாங்கம் ஆரம்பித்துள்ளது.

புதிய மாறுபாடுகள் தோன்றுவது வைரஸ் பரிணாம வளர்ச்சியின் ஒரு வழக்கமான பகுதியாகும் என மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.

காலத்திற்கு காலம் இந்த புதிய மாறுபாடுகள் எதிர்பார்க்கப்படுகின்றன,இதனை எதிர்கொள்வதற்கு எங்களின் அமைப்பு முறைகள் தயாராக உள்ளன என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.