நகைப் பிரியர்களுக்கு வெளியான ஷாக் நியூஸ் : தங்கத்தின் விலை மீண்டும் உயர்வு!


இன்று (26) தங்கத்தின் விலை சிறிதளவில் அதிகரித்துள்ளது. சர்வதேச சந்தையில் ஏற்பட்ட விலை உயர்வுக்கேற்ப, இலங்கையிலும் தங்க விலை உயர்ந்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க நகை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

நேற்றைய விலையுடன் ஒப்பிடுகையில், இன்று பவுண் ஒன்றுக்கு ரூ.1,000 அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. இன்றைய நிலவரப்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ.2,68,000-க்கு விற்பனை செய்யப்படுகிறதுடன், 22 கரட் தங்கத்தின் ஒரு பவுண் ரூ.2,48,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

அதேவேளை, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.33,500 என்றும், 22 கரட் தங்கத்தின் ஒரு கிராம் ரூ.31,100 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.