சீரற்ற காலநிலை தாக்கம்: மூடப்பட்ட பாடசாலை!


ஹட்டன் கல்வி வலயத்திற்கு உட்பட்ட காசல்ரீ கார்பெக்ஸ் தமிழ் மகா வித்தியாலய கட்டிடங்கள் மீது, மரங்கள் விழும் அபாயம் காணப்படுவதால்  இரண்டு நாட்களுக்கு, பாடசாலையை மூட முடிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாடசாலைக்கு முன்னாள் இரண்டு பெரிய மரங்கள் உள்ளதாகவும், அது முறிந்து விழும் அபாயத்தில் உள்ளதால் அதிபரின் முடிவுக்கு ஏற்ப அதனை அகற்றும் பொருட்டு பாடசாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதன்படி இன்றும் நாளையும் பாடசாலையை மூட முடிவு செய்யப்பட்டுள்ளது. 

இதன்படி குறித்த பாடசாலையில் 1 முதல் 13ஆம் வகுப்பு வரை மாணவர்கள் கல்வி பயின்று வருகிறார்கள். மொத்தம் 358 மாணவர்கள் இப்பாடசாலையில் கல்வி கற்றுவருகிறார்கள்.

முன்னதாக பாடசாலைக்கு அருகில் இரண்டு பெரிய மரங்கள் விழும் அபாயத்தில் உள்ளன என்றும், ஹட்டன் வலயக் கல்வி அலுவலகத்திற்கு இரண்டு மரங்களை வெட்டுமாறு அதிபரால் அறிவிக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

எனினும், மரங்களை வெட்ட நடவடிக்கை எடுக்காததால், மரத்தின் பல கிளைகள் பாடசாலை கட்டிடங்களின் மீது விழுந்துள்ளன என்றும் இதனால் பாடசாலை மூடப்பட்டதாகவும் கூறப்படுகிறது.