புற்றுநோய் விழிப்புணர்வை ஏற்படுத்த தலைமுடி தானம் - மொட்டை அடித்த எம்.பி அர்ச்சுனா!


பாரளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா  தனது  பிறந்த தினத்தை முன்னிட்டு புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வுக்காக மொட்டை போட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் முகநூலில் ஒரு கருத்தை பதிவிட்டுள்ளார். 

அதாவது பிறந்தநாளை முன்னிட்டு புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இருக்கும் நோயாளர்களுக்கு தலைமுடி தயாரித்து வழங்கும் இலங்கை நிறுவனம் ஒன்றிற்கு தலைமுடியை தானமாக வழங்கி இருக்கிறேன்.

புற்றுநோய் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவோம்.

புற்று நோயாளிகளின் வலிகளையும் புரிந்து கொள்வோம் என அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.