நேபாளத்தில் திறந்து வைக்கப்பட்ட முதல் தாய்ப்பால் வங்கி!
குறைந்த எடையுடன் பிறக்கும் குழந்தைகள், குறைப்பிரசவக் குழந்தைகள் மற்றும் குறைபாடுகளுடன் பிறக்கும் குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்குவதற்காக நேபாளம் தனது முதல் தாய்ப்பால் வங்கியைத் திறந்துள்ளது.
யுனிசெஃப், நேபாள அரசு மற்றும் பிற கூட்டாளர்களை உள்ளடக்கிய ஒரு கூட்டு முயற்சியின் அடிப்படையில் இந்த தாய்ப்பால் வங்கியானது திறக்கப்பட்டுள்ளது.
உலகளவில், ஆண்டுதோறும் 15 மில்லியனுக்கும் அதிகமான குறைப்பிரசவக் குழந்தைகள் பிறக்கின்றன.
இதில் நேபாளம் மற்றும் பிற நடுத்தர வருமான நாடுகளில், ஒவ்வொரு ஆண்டும் 81,000 குறைப்பிரசவங்கள் நிகழ்கின்றன, இந்நிலையில் அந்நாட்டில் தாய்ப்பால் வங்கியானது மிகவும் அத்தியாவசியத் தேவையாகக் கருதப்படுகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
Tags:
உலகம்