எரிபொருள் விலை தொடர்பில் வெளியான புதிய அறிவிப்பு!


ஜூலை மாதத்திற்கான எரிபொருள் விலையில் எந்த மாற்றமும் இல்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.

நாளை (30) கூடவுள்ள எரிபொருள் விலை நிர்ணயக் குழுவால் விலை நிர்ணயம் குறித்த இறுதி தீர்மானம் எடுக்கப்படும் என்றாலும், குறிப்பிடத்தக்க திருத்தம் எதுவும் எதிர்பார்க்கப்படவில்லை என்று இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாக பணிப்பாளர் மயூரா நெத்திகுமாரகே தெரிவித்துள்ளார்.

விலை நிர்ணயக் குழு கடந்த மாத எரிபொருள் விலைகள் மற்றும் சமீபத்திய எரிப்பொருள் இறக்குமதிகளின் விலையை அடிப்படையாகக் கொண்டு தீர்மானிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.