ஆண் தாதி ஒருவரின் மோசமான செயலால் யாழ் வைத்தியசாலை ஒன்றினுள் பரபரப்பு!


யாழ்ப்பாணத்தில்  அரசாங்க வைத்தியசாலையில் நேற்று சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த 15 வயது மதிக்கத்தக்க சிறுமியிடம்  ஆண் தாதி ஒருவர் தகாத முறையில் நடந்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது,  குறித்த  அரசாங்க  வைத்தியசாலையில் சிறுமி ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

குறித்த சிறுமி நேற்று மாலை முகம் கழுவுவதற்காக வைத்தியசாலையில் குளியலறைப் பகுதிக்கு சென்றிருந்த வேளை, விடுதியில் தங்கி இருந்த  ஆண் தாதி ஒருவர்  சிறுமியிடம் தகாத முறையில் நடந்து கொண்டுள்ளதுடன் , அது தொடர்பில் யாருக்கும் சொல்லக்கூடாது எனவும் அச்சுறுத்தியுள்ளார்.

இந்நிலையில் வைத்தியசாலைக்கு வந்த தாயிடம் சிறுமி நடந்தவற்றை தெரிவித்துள்ள நிலையில்  குறித்த சம்பவம் அம்பலமாகியுள்ளது.