இன்று இடம்பெற்ற கோர விபத்தில் 10 இற்கும் மேற்பாட்டோர் வைத்தியசாலையில் அனுமதி!


மாவனெல்ல பகுதியில் இன்று (28) அதிகாலை 5 மணியளவில் விபத்து சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நித்திரை காரணமாக இடம்பெற்ற இவ்விபத்தில் சாரதியின் நிலைமை மோசமாக உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

லொறியில் பயணித்து விபத்தில் சிக்கிய  பதினொரு பேரும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும் விபத்து தொடர்பிலான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.