அரச நியமனம் கோரி தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்ட மாம்பழ வியாபாரி!


இன்றைய தினம் (26) திருகோணமலையில் உள்ள கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் முன்பாக அரச நியமனம் கோரி பட்டதாரி ஒருவர் தனிநபர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார் .

மாம்பழ வியாபாரியாக அமர்ந்து, கோர்ட் சூட் அணிந்து  தனது பட்டத்தை கையில் எடுத்து தனிநபர் போராட்டத்தில் குதித்தார்.

கிண்ணியாவை சேர்ந்த குறித்த பட்டதாரி, அரச துறையில் தனக்கு நியமனத்தை வழங்குமாறும், கலைப் பட்டத்தை இல்லாமல் ஆக்குங்கள் போன்ற கோரிக்கைகளையும் முன்வைத்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளார்.