மே மாதத்துக்கான அஸ்வெசும கொடுப்பனவு இன்றைய தினம் வங்கிக் கணக்குகளில்!
அஸ்வெசும பயனாளர்களின் மே மாதத்திற்கான கொடுப்பனவை அவர்களின் வங்கி கணக்குகளில் வைப்பிலிட நடவடிக்கை எடுக்கப்படுமென நலன்புரி சபை தெரிவித்துள்ளது.
இதற்கென தகுதிப்பெற்றுள்ள 14 இலட்சத்து 23,895 குடும்பங்களுக்கென ரூ. 11, 274 மில்லியன் நிதி வங்கி கணக்குகளில் இவ்வாறு வைப்பிலிடப்படவுள்ளது.
இன்றைய தினம் முதல் பயனாளர்கள் அதனைப் பெற்றுக்கொள்ள முடியுமென நலன்புரி சபை அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி