குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் விசேட அறிவிப்பு
குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது.
அந்த அறிக்கையில், உள்ளூராட்சித் தேர்தல் பணிகள் காரணமாக மே 5, 6 மற்றும் 7 ஆம் திகதிகளில் ஒரு நாள் மற்றும் வழக்கமான கடவுச்சீட்டுக்களை வழங்கும் சேவைகளை வழங்குவது மட்டுப்படுத்தப்படவுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக, ஒரு நாள் சேவைகளுக்காக இயக்கப்பட்ட 24 மணி நேர சேவை அந்த நாட்களில் செயல்படாது என்றும் திணைக்களம் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளது.
Tags:
இலங்கை செய்தி