க.பொ.த உயர்தரப் பரீட்சை மீளாய்வு காலம் நீடிப்பு!


2024 ஆம் ஆண்டு க.பொ.த உயர்தரப் பரீட்சை முடிவுகளை மீள்பரிசீலனை செய்வதற்காக விண்ணப்பிக்க முடியாதவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு, பரீட்சைத் திணைக்களம் விண்ணப்பிக்கும் காலத்தை நீடிக்க முடிவு செய்துள்ளது. இந்த நீடிக்கப்பட்ட காலப்பகுதியில், எதிர்வரும் 28 ஆம் திகதி முதல் 30 ஆம் திகதி வரையிலான நாட்களில் இணையவழி மூலம் மீள்பரிசீலனைக்கான விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் ஏ.கே.எஸ். இந்திகா குமாரி லியனகே அறிவித்துள்ளார்.

விண்ணப்பிக்க விரும்புவோர், பரீட்சைத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையதளமான www.doenets.lk இற்கு சென்று “Our Services” பகுதியின் கீழ் உள்ள “Exam Information Centre” என்பதை தேர்ந்தெடுத்து விண்ணப்பிக்க வேண்டும். அதேபோன்று, திணைக்களத்தின் உத்தியோகபூர்வ மொபைல் செயலி (DOE) மற்றும் onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் மூலமும் விண்ணப்பிக்க முடியும்.

ஏற்கனவே மீள்பரிசீலனைக்கு விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இதுவரை விண்ணப்பிக்க முடியாதவர்கள், விண்ணப்பிப்பதற்குள் ஏதேனும் தொழில்நுட்பப் பிரச்சினைகள் ஏற்பட்டால், தங்கள் சந்தேகங்களுக்கு உதவி பெறுவதற்காக இணைய வழி கிளை 0113661122, 0113671568 மற்றும் பாடசாலை பரீட்சைகள் மதிப்பீட்டு கிளை 0112785231, 0112785681 ஆகிய தொலைபேசி இலக்கங்களை தொடர்புகொள்ள முடியும்.