குறைந்த வருமானம் ஈட்டும் மக்களுக்கு மகிழ்ச்சி தகவல்!
குறைந்த வருமானம் ஈட்டுபவர்களுக்கு வீட்டுவசதி உதவி வழங்கும் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. நகர அபிவிருத்தி நிர்மாணிப்பு மற்றும் வீடமைப்பு அமைச்சு குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதன்படி, குறைந்த வருமானம் பெறுபவர்களுக்கு 10 இலட்சம் ரூபா வரை நிதி உதவி வழங்கப்படும் என பிரதி வீடமைப்பு அமைச்சர் டி.பி. சரத் தெரிவித்துள்ளார்.
திட்டத்திற்கான பயனாளிகள் தேர்வு கிராம அலுவலர் மட்டத்தில் இருந்து தெரிவு செய்யப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Tags:
இலங்கை செய்தி