டொனால்ட் ட்ரம்ப்பின் பரஸ்பர வரிக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பரஸ்பர வரி விதிப்புக்கு வா்த்தக நீதிமன்றம் விதித்த தடையை நீக்கி அந்நாட்டு உயர்நீதிமன்றம் தற்காலிக அனுமதி வழங்கியுள்ளது.
உலக நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் பரஸ்பர வரி விதித்தும், கனடா, மெக்ஸிக்கோ, சீனா ஆகிய நாடுகளுக்கு கூடுதல் இறக்குமதி வரி விதித்தும், ஏராளமான நாடுகளின் பொருட்களுக்கு கூடுதலாக 10 சதவீத அடிப்படை வரி விதித்தும் ட்ரம்ப் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியின் ஆட்சி நடைபெறும் 12 மாகாணங்கள் நியூயோர்க் நகரிலுள்ள சா்வதேச வா்த்தக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தன.
இதனை விசாரித்த மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, ட்ரம்ப் பிறப்பித்துள்ள உத்தரவுகள் அவரின் அதிகார மீறலாகும் என்று விமர்சித்து, அனைத்து உத்தரவுகளும் நிரந்தரமாக இரத்து செய்யப்படுவதாக தெரிவித்தனர்.
இந்த உத்தரவை எதிர்த்து அமெரிக்க அரசு சார்பில் உச்சநீதிமன்றத்தில் நேற்று (29) முறையிடப்பட்டது.
வரி விதிப்பு விவகாரத்தில் வர்த்தக நீதிமன்றத்தின் தடைக்கு அவசர நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அரசின் முறையீட்டை உயர் நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
மேலும், வரி விதிப்பை நிறுத்திவைப்பது தேசிய பாதுகாப்புக்கு தீங்கு விளைவிக்கும் எனத் தெரிவித்த அந்நாட்டு உயர்நீதிமன்றம், தற்காலிகமாக வரி விதிப்பு நடவடிக்கைக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.