கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியது தேசிய மக்கள் சக்தி!
நடைபெற்று முடிந்த உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி 48 ஆசனங்களைப் பெற்று கொழும்பு மாநகர சபையைக் கைப்பற்றியுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல்களில் கொழும்பு மாநகர சபைக்கான முடிவுகளின்படி, ஏனைய கட்சிகள் கூட்டாக 69 இடங்களைப் பெற்றுள்ளன.
அவற்றில், ஐக்கிய மக்கள் சக்தி 29 இடங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி 13 இடங்களையும் வென்றுள்ளன.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன 05 இடங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 04 இடங்களையும், சர்வஜன அதிகாரம் 02 இடங்களையும் வென்றுள்ளன.
Tags:
இலங்கை செய்தி