கோர விபத்தில் சிக்கி 14 வயதுடைய சிறுவன் பலி!


மாத்தறை- ஹக்மனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில்  14 வயதுடைய சிறுவன் செலுத்தி  சென்ற துவிச்சக்கர வண்டியுடன் லொறி ஒன்று நேருக்கு நேர் மோதியதில் சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

காயமடைந்த சிறுவன் தங்காலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.